×

மாற்றுத்திறனாளிகளின் தற்காலிகப் பாதையை நிரந்தரமாக்குவோம்: முதல்வர் உறுதி

சென்னை: கடல் அலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம். அதை விரைவில்  நிரந்தரம் ஆக்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட’ என கூறி உள்ளார்.

Tags : Chief Minister , We will make the temporary path of the disabled permanent: Chief Minister confirmed
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...