ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருவாடானை அருகே வங்கி மேலாளர் போல போனில் பேசி ரூ. 1 லட்சம் மோசடி செய்துள்ளார். வாங்கிய கடனை உடனே திருப்பிச் செலுத்தினால் 30 சதவிகிதம் தள்ளுபடி எனக்கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.