×

இன்று காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் கொடி ஏற்றும் போது திடீரென அறுந்தது: சோனியா, ராகுல், பிரியங்கா அதிர்ச்சி

புதுடெல்லி: இன்று காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி தலைமையத்தில் சோனியா கொடி ஏற்றிய போது, திடீரென கட்சி கொடி அறுந்து விழுந்ததால் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு நிறுவன தினம் இன்று கடைபிடிக்கப்படுவதால், டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கட்சிக் கொடியை ஏற்ற வந்தார். அப்போது கொடியை ஏற்றுவதற்காக கயிற்றை பிடித்து வழக்கம் போல் சோனியா காந்தி மேல் நோக்கி இழுத்தார்.

அப்போது அவர் அருகில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், சோனியா காந்தியிடம் இருந்த கயிற்றை வாங்கி வேகமாக கொடியின் கயிற்றை மேல் நோக்கி இழுத்தார். எதிர்பாராத விதமாக மேலே சென்ற கொடி, கயிற்றுடன் சேர்ந்து அறுந்துவிழுந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி  மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கொடியை மீண்டும் ஏற்றி வைக்குமாறு கட்சி  நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, மீண்டும் கொடியை ஏற்றுவதற்காக அதனை சரிசெய்ய அறிவுறுத்தினார். அதன்பின் கயிறு மாற்றப்பட்டு மீண்டும் கொடி ஏற்றப்பட்டது. காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி முறையாக நடைபெறாதது குறித்து பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் சிறிது நேரம் கட்சி தலைமையகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Congress party ,Sonia ,Rahul ,Priyanka , Congress, Foundation Day, Flag, Sonia, Rahul, Priyanka
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...