×

திண்டுக்கல்லில் தாயை ஓட ஓட விரட்டி வெட்டிய மகன் கைது!: காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர். வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி மந்தி குளத்தை சேர்ந்த சுப்பிரமணி - பஞ்சவர்ணம் தம்பதியின் 27 வயது மகன் சதீஷ்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சதீஷ்குமார் பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அதற்கு அவரது தாய் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஞ்சவர்ணத்தை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சதிஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காதல் கண்ணை மறைக்கும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் திண்டுக்கல்லில் காதலுக்காக ஒருபடி மேல் சென்று பெற்ற தாயையே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Dinduckal , Dindigul, love, arrest
× RELATED சி.வி.சண்முகம் சொன்னபடி ரூ.50 கோடி செலவு...