கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 28-ம் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆய்விற்காக வந்த வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் அவர்களுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
காவல்நிலையத்தில் உள்ள கோப்புகள் குறித்தும்,நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.