×

முகவரி கேட்பதுபோல் நடித்து தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, தனியாக நடந்து செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம்  மர்ம நபர் ஒருவர், முகவரி கேட்பதுபோல் நடித்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு திருமங்கலம், நேரு நகர் பகுதியில், தனியாக நடந்து சென்ற 13 வயது சிறுமிக்கு அந்த மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியோடினார். இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, தனது தந்தையிடம்  கூறி அழுதாள். இதனையடுத்து, அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அங்கு சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி, பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தார்.

பின்னர், அவரை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த மகளிர் போலீசார்,  விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த சரவணன் (30) என்பதும், திருமங்கலத்தில் பணியாற்றி வருவதும், தனியாக நடந்து செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து, பாலியல் தொல்லை தந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pokோmon , Sexual harassment of women who pretend to ask for an address and go alone: Youth arrested in Bokso
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கியவரை விடுதலை...