×

நின்றிருந்த லாரியில் திடீர் தீ-உத்தமபாளையத்தில் பரபரப்பு

உத்தமபாளையம் :  உத்தமபாளையத்தில் நின்றிருந்த லாரியில், திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளையத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி கிட்டங்கி, மண்ணெண்ணெய் பல்க் ஆகியவை உள்ளன.

இங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்காக நேற்று லாரியை நிறுத்தியிருந்தனர். அப்போது திடீரென லாரியில் தீப்பற்றி எரிந்தது. புகை குபு,குபுவென பரவியதை பார்த்த பொதுமக்கள், இது குறித்து உத்தமபாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், லாரியில் முன்புறத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



Tags : Uthamapalaiyam , Uththamapalaiyam: A fire broke out in a lorry parked at Uththamapalaiyam. To the Co-operative Society at Uthamapalaiyam
× RELATED உத்தமபாளையத்தில் பழுதான லாரியால் 10 மணிநேரம் டிராபிக்