×

29, 30ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்


சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மறுநாள் மற்றும் வருகிற 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

31ம் தேதி கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.இன்று மற்றும் நாளை உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும்,  புறநகர் பகுதிகளில் லேசான பனி மூட்டமும் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. அதேசமயம் மீனவர்களுக்கான  எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.

Tags : Meteorological Center , வானிலை ஆய்வு மையம்
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...