திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடங்களை ஆய்வு செய்ய தர கட்டுப்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் தங்கியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனவும் கூறினார்.