சென்னை: சி.எம்.ஏ தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியில் எழுதுகிறவர்கள் தட்டச்சு அல்லது எழுத்துப்பூர்வமாக தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் எழுதுபவர்கள் தட்டச்சு மட்டும்தான் செய்ய வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.