×

ரயில் முன் பாய்ந்து எஸ்எஸ்ஐ தற்கொலை: விருதுநகரில் சோகம்

விருதுநகர்: மன அழுத்தம் காரணமாக ரயிலில் பாய்ந்து எஸ்எஸ்ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மார்டன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (51). விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வந்தார். இவரது மனைவி பானுமதி சிவகாசி டவுன் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியில் உள்ளார். இவர்கள் மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் பிளஸ் 1ம் படித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் காவல்துறையில் பணிபுரிவதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என தன்னுடன் பணிபுரிந்தவர்களிடம் கூறி ராதாகிருஷ்ணன் புலம்பி வந்துள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்து வந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் பின்புறம் சென்று டூவீலரை நிறுத்தி விட்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவர், விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த இடம் தூத்துக்குடி ரயில்வே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ராதாகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி ரயில்வே காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SSI ,Virudhunagar , SSI commits suicide by jumping in front of train: Tragedy in Virudhunagar
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது