ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற பெண் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த முத்துச்செல்வி மீது மர்மநபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலுக்கு ஆளான திமுக கவுன்சிலர் முத்துச்செல்வி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.