×

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி தகவல்

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (விரிந்துரைக்கும் வகை). கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை).

கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை) வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித்தேர்வில் (குரூப் 2, குரூப் 2ஏ உட்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்’’ எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் குரூப் 2 தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் முதன்மை தேர்வு பிரிவில் திருக்குறள் தொடர்பான கேள்விகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thirukural ,DNBSC ,Umamageswari , DNPSC Secretary Umamageswari informs:
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!