×

பாரதியார் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சி

சென்னை: தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பாரதியார் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சி நேற்று 4வது வாரமாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் கடந்த 4ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக 4வது வாரமாக நேற்று  சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் மகாகவி பாரதியாருக்கு  “ஸ்வர்ண நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டிய அஞ்சலி” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் அண்ணாதுரை வரவேற்று பேசினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.


Tags : Bharatiyar Praise One Year Series
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...