சென்னை: சைப்ரஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணிடம் பேஸ்புக் மூலம் பழகி, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்த சென்னையை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலமாக பெண் அனுப்பிய புகாரில் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.