×

'3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மீண்டும் முன்னோக்கி செல்வோம்': ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சால் விவசாயிகள் அதிர்ச்சி..!!

டெல்லி: 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் சற்று பின்வாங்கியுள்ள ஒன்றிய அரசு, மீண்டும் முன்னோக்கி செல்லும் என்று ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியிருப்பது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டாக தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்துக்கு பணிந்து 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டே புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 வேளாண் சட்டங்களில் சற்று பின்வாங்கி இருப்பதாகவும் மீண்டும் முன்னோக்கி செல்லும் என்றும் ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

வேளாண் சட்ட விவகாரத்தில் மீண்டும் ஒன்றிய அரசு முன்னோக்கி செல்லும் என்று தோமர் கூறியிருப்பதால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்று விவசாயிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்க ஒன்றிய அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், ஆனால் சில விவசாய சங்கங்கள் அதற்கு குறுக்கே நிற்பதாகவும் ஏற்கனவே தோமர் கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி இருப்பது பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Union Minister ,Narendra Singh Tomar , Agriculture Law, Union Minister Narendra Singh Tomar, Farmers
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...