சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த புகாரில் இபிஎஸின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வந்த செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் உதவியாளர் கைதான நிலையில் நண்பர் செல்வகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.