கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 41 ஊராட்சிகளுக்கும் கொரோனா தடுப்பு தடுப்பூசி செலுத்துவதற்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வை கோட்டாட்சியர் சரவணன் தொடங்கி வைத்துள்ளார். கோட்டாட்சியர் சரவணன் உடன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.