வேலூர்: காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2வது நாளாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவலம் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி 2வது நாளாக தீவிரமாக நடக்கிறது. மேம்பாலத்தின் 38 மற்றும் 39வது தூண்களை கான்கிரீட் மூலம் பலப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.