வாஷிங்டன் : ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாலும், நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும், தற்போது உலகளாவிய பயணம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான காலத்தை வெகுவாக குறைப்பதற்காகவும் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.