திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் முன்பகுதியில் உள்ள டீ கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.