மதுரை: கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார். இரவு ரோந்தின்போது மதுரை மாநகரில் விளக்குத்தூண் பகுதி அருகே பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிர் நீத்த தலைமை காவலர் திரு.சரவணன் அவர்களின் இறுதி சடங்கில் காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.