புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை கவரிங் நகையாக மாற்றி அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அளித்த புகார் காரணமாக வங்கியில் உள்ள நகைகளை தலைமை அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி கடன் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.