சென்னை: சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 3300 சதுரடி பரப்பளவுள்ள மனை மற்றும் வணிகம் கட்டிடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சீராய்வு கூட்டங்களின் அறிவுறுத்தலின்படி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 3300 சதுரடி பரப்பளவுள்ள மனை மற்றும் கட்டிடம் திரு. பாலகிருஷ்ணன் என்பவரிடம் 33 ஆண்டுகளாக வாடகை விடப்படிருந்தது. இக்கட்டிடத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகை மற்றும் நிலுவை தொகையினை கட்ட தவறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி அ.ரமணி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.