×

அதிமுக கிளைகளை கட்டமைக்காவிட்டால் ஒரு இடம் கூட கிடைக்காது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை!!!

விழுப்புரம்: அதிமுக கிளை கழகத்தை கட்டமைக்காவிட்டால் 50 கோடி ரூபாய் செல்வு செய்தாலும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு அரை ஆண்டுகளும், எம்.பி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளும் அவகாசம் உள்ளதாக கூறிய அவர் அதிமுக கிளை கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும் என்றார்.

இல்லாவிட்டால் 50 கோடி ரூபாய் செலவழித்தாலும் ஒரு இடம் கூட கிடைக்காது என்று சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார். காலியாக உள்ள பதவிகளில் புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி தான் நல்லது செய்வார்கள் என்று நினைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறிய அவர், ஆனால் எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சியின் மீதுள்ள கோவத்தை வெளிப்படுத்தி எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.           


Tags : minister ,C. VV , AIADMK, branch, former minister CV Shanmugam, warning
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...