×

சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர்பாபா மீது கூடுதலாக 2 போக்சோ வழக்கு பதிவு: 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீதிபதி உத்தரவு

சென்னை: சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர்பாபா  மீது மெட்ரோ பாலிடன்  சிபிசிஐடி போலீசார் கூடுதலாக  இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர்பாபா   பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஏற்கனவே செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளும், பெண்களை மானபங்கம் படுத்தியதாக  செங்கல்பட்டு மகிளா, நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மெட்ரோ பாலிடன்  சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது மேலும், இரண்டு  போக்சோ   வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்  சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை நேற்று  ஆஜர்படுத்தினர். இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து  உத்தரவிட்டார் 4.1.2022 அன்று மீண்டும் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதுவரை சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ  வழக்குகளும்,  பெண்களை மானபங்கம் படுத்தியதாக 2 வழக்குகள் என 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags : Sushilhari ,governor ,Sivasankar Baba , 2 more pox cases registered against Sushilhari school governor Sivasankar Baba: 2 additional pox cases registered against Sushilhari school governor Sivasankar Baba
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...