×

கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பதுங்கியிருந்த நல்லபாம்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தில் அருங்குளம் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது, ஊழியர் உரக்கிடங்கை திறந்தபோது அங்கு, ஐந்தரை அடி நல்ல பாம்பு கிடந்தது. தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு துறையினர் நல்லபாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால், அங்கு பரபரப்பு மற்றும் பதட்டம் ஏற்பட்டது.

Tags : Co-operative Society , Snake lurking in the Co-operative Society building
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்