ராமநாதபுரம்: பரமக்குடி அருகே தெளிச்சாத்தனாலூர் வைகை ஆற்றில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் மீட்கப்பட்ட சடலம் தெளிச்சாத்தனாலூர் கிராமத்தை சேர்ந்த தெய்வந்திரன்(42) என தெரியவந்துள்ளது. தெய்வந்திரன் குளிக்கும் போது சகதியில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .