சென்னை : சென்னை போரூர் அருகே இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். சபரிமலைக்கு சென்று திரும்பிய முகலிவாக்கத்தைச் சேர்ந்த சங்கர்(60), சின்னராஜ்(28) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணம் செய்த மகேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.