×

புழல் சிறையில் கைதிகளுக்கு தேர்வு

சென்னை: புழல் சிறையில் உள்ள தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் ஆகிய பிரிவுகளில் 2,700 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் 8, 10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா காலத்தால் நிறுத்திவைக்கப்பட்ட 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று புழல் தண்டனை சிறை வளாகத்தில் நடந்தது. இதில், தண்டனை கைதிகள் 41 பேர், விசாரணை கைதிகள் 15 பேர் என மொத்தம் 56 கைதிகள் தேர்வு எழுதினர். மகளிர் சிறையில் 11 பெண் கைதிகள் தேர்வு எழுதினர். இதில் பிரபல ரவுடி வியாசர்பாடி நாகேந்திரன் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.   


Tags : Punjab Jail , Selection for inmates in the Punjab Jail
× RELATED புழல் சிறையில் கைதிகளுக்கு தேர்வு