ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 55 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் பயணித்த இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.