சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.