×

பனாமா பேப்பர்ஸ் லீக் விவகாரம்: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜர்

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜராகியுள்ளார். பனாமா பேப்பர்ஸ் லீக் விவகாரம் தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகாததால் தற்போது 3வது முறை ஆஜராகமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார். சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா லீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த செய்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட பனாமா ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது. ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி பனாமா பேப்பரில் 700க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் உள்ளன.

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்குவதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வதுதான் பொன்சேகா நிறுவனத்தின் பணியாகும். இந்த நிறுவனத்திலிருந்து ரகசிய ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 80 நாடுகளைச் சேர்ந்த 107 பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டனர். உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கணக்கில் வராத சொத்துகளைப் பதுக்கியுள்ளார்கள் என்பது ஆவணங்கள் வாயிலாக தெரியவந்தது. பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டூர் டேவிட் குன்லாக்ஸன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி இழந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஊழல் விவகாரத்தில் சிக்கினர்.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கப் துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் 1999-ன் கீழ் ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இதேபோன்று சம்மன் ஐஸ்வர்ய ராய்க்கு அனுப்பப்பட்டது, ஆனால், அப்போது அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராகவில்லை. இந்த பனாமா பேப்பர்ஸ் ஊழலில் 300 இந்தியர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளன. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்கள் மீது வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Tags : Papers League ,Aishwarya Rai Azhar ,Delhi , Aishwarya Rai
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...