×

அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும்: மத அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!!

லக்னோ: மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில்  ரேபரேலி தொகுதியில் மக்களுடன் சந்திப்பு மற்றும் தீவிர பிரச்சாரத்தில்  பிரியங்கா காந்தி ஈடுபட்டு வருகிறார்.

இதனையடுத்து, இன்று அவரை சந்தித்த செய்தியாளர்கள் ராகுல்காந்தியின் இந்துத்துவா கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பிரியங்கா பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர்.

மேலும், அவர்கள் செல்லும் பாதை நீதி நேர்மை இல்லாதது. அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்து மதம் போதிக்கிறது. இந்த வேறுபாட்டைத்தான் ராகுல்காந்தி மக்களுக்கு எடுத்து காட்ட முயற்சிக்கிறார் என்று பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : BJP government ,Priyanka Gandhi , Religious politics, BJP government, Priyanka Gandhi, indictment
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்