×

வேலூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை: ஆந்திர கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு என தகவல்..!

வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த 15ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையானது இரவு 10 மணிவரை செயல்பட்டிருக்கிறது. இதனிடையே நகைக்கடையின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் கீழ்த்தளத்திலுள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

இதில் நகைக்கடையில் இருந்த 15 கிலோ தங்க நகைகள், 500 கிராம் வைரம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, டீக்காராமன் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உள்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். பிடிபட்ட 10 பேர் கும்பலுக்கு ஆந்திர கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Velur ,AP , Vellore, jewelery robbery, police, investigation
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?