சென்னை: எம்.ஜி.ஆரின் 34ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தேதி சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார். எம்.ஜி.ஆரின் 34ம் ஆண்டு நினைவு நாள் வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க உள்ளார். அதற்காக, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் வரையில் சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.