திருவில்லிபுத்தூர்: தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப்பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறேன் என திருவில்லி. ஜீயர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறேன்’’ என்றார்.