×

எஸ்எஸ்ஐ கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை: திருச்சி நவல்பட்டு போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (55). கடந்த மாதம் 21ம்தேதி ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தஞ்சை மாவட்டம் தோகூரை சேர்ந்த மணிகண்டன்(19) மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள மணிகண்டனுக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், குற்றவாளியான மணிகண்டனுக்கு ஜாமீன் தர மறுத்து விட்டார். இந்நிலையில் குண்டர் சட்டத்தில் கொலை குற்றவாளி மணிகண்டனை கைது செய்ய புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமுக்கு, எஸ்பி நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Tags : Murder, criminal, thug law, arrest
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...