சென்னை: நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த பின் இதனை முதலமைச்சர் பேசியுள்ளார். மேலும் சாலை விபத்துகளை பொறுத்தவரை இந்திய அளவில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் வருத்தத்தை தருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.