×

வாலிபருக்கு சரமாரி வெட்டு: நண்பனுக்கு வலை

ஆவடி: குடிபோதையில் ஏற்பட தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற நண்பரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புழல் காவாங்கரை திருமலை நகர், 19வது தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவிகுமார் (22). பிரபல ரவுடி. இவர் மீது அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயில், கொரட்டூர், செங்குன்றம் உள்பட பல காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பர் ஆவடி அடுத்த அயப்பாக்கம் சக்தி நகரை சேர்ந்த கோபிநாத் (22). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபிநாத், சிரஞ்சீவிகுமாரை அழைத்து கொண்டு அயப்பாக்கம் பகுதிக்கு சென்றார்.

அங்கு அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ஒரு வங்கி அருகில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து, இருவரும் மது அருந்தினர். அந்த நேரத்தில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பு ஆனது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிரஞ்சீவிகுமாரை சரமாரியாக வெட்டினர். அதில் அவருக்கு தலை, 2 கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்த கோபிநாத், அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த சிரஞ்சீவிகுமாரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர்ஆனந்த் வழக்குப் பதிவு  செய்து தலைமறைவாக உள்ள கோபிநாத்தை வலைவீசி தேடி வருகிறார்.

Tags : Volley , Teenager, cut, friend,
× RELATED நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில்...