×

போதையில் இருந்த சென்னை தொழிலதிபருடன் நடிகைகளை நெருக்கமாக காட்டி ஆபாச வீடியோ: 2.50 கோடி கேட்டு மிரட்டிய 2 பைனான்சியர்கள் கைது

* அறையில் நிர்வாணமாக இருந்த நடிகைகள் மீது நடவடிக்கை பாய்கிறது

சென்னை: சென்னை பாண்டிபஜார் ராமன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இளம் தொழிலதிபரான இவருக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சூப்பர் மார்க்கெட்கள் உள்ளது. இதுதவிர திருச்சியில் பெரிய அளவில் ஷாப்பிங் மால் ஒன்றும் உள்ளது. தொழிலதிபர் ராஜா சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு ஆன்லைன் மூலம் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க பாண்டி பஜார் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி கரூர் பகுதியை சேர்ந்த பைனான்சியர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தொழிலதிபர் ராஜாவின் ஆபாச வீடியோவை பறிமுதல் செய்தனர். இந்த மோசடி குறித்து போலீசார் கூறியதாவது:  தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தொழிலதிபர் ராஜாவுக்கு 2016ம் ஆண்டு பைனான்சியர்கள் ரமேஷ், கார்த்திக் ஆகியோர் அறிமுகமாகினர். அவர்களுடன் தொழிலதிபர் ராஜா நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது, ராஜாவுக்கு பல கோடி வருமானம் வருவதை தெரிந்து கொண்டனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நண்பர் பிறந்த நாள் விழாவுக்கு தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு தொழிலதிபர் ராஜாவை மது விருந்துக்கு அழைத்துள்ளனர். ராஜா சென்றுள்ளார். பிறந்த நாள் விழாவில் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் பலர் வந்துள்ளனர். கேக் வெட்டிய பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ராஜா மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதும், அவரை அதே நட்சத்திர ஓட்டல் அறை ஒன்றில் பைனான்சியர்கள் தங்க வைத்துள்ளனர். பிறகு குடிபோதையில் இருந்த ராஜாவின் அறைக்கு நிர்வாணமாக நடிகைகளை அனுப்பி ராஜாவுடன்அவர்கள்  ஒன்றாக இருப்பது போன்று பல கோணங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பைனான்சியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் எடுத்துள்ளனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பைனான்சியர்கள் தொழிலதிபர் ராஜாவின் செல்போனுக்கு வீடியோ ஒன்று அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ராஜா, மது போதையில் துணை நடிகைகளுடன் தான் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து பைனான்சியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் இதை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் 2 கோடி தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

பிறகு ஒரு வழியாக பேரம் பேசி 50 லட்சம் பணம் தருவதாக ராஜா ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை வாங்க   பைனான்சியர் ரமேஷ் தனது கார் டிரைவர் மோகன் என்பவரை தொழிலதிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ராஜா தனது பாதுகாப்புக்காக,  ரமேஷ் கார் டிரைவர் மோகன் பணத்தை எண்ணி ஒரு பையில் வைக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டார்.  பிறகு மீண்டும் பைனான்சியர்கள், எங்களுக்கு ஒரே தவணையாக 2.50 கோடி வேண்டும் இல்லை என்றால் துணை நடிகைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மீண்டும் மிரட்டியுள்ளனர். அதைதொடர்ந்து வேறு வழியின்றி தொழிலதிபர் ராஜா சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.  

இதையடுத்து, தொழிலதிபர் ராஜா மூலம், கேட்ட பணத்தை தருவதாக பைனான்சியர்கள் 2 பேரை சென்னைக்கு வரவழைத்து கையும் களவுமாக கைது செய்தோம்.  மேலும், நிர்வாணமாக இருந்த நடிகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் கைது செய்யப்பட்ட பைனான்சியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளிக்கும் தகவலின்படி, தொழிலதிபருடன் நிர்வாணமாக இருந்த நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் மீதும் வீடியோ ஆதாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Chennai , Porn Video, Financiers, Arrested
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...