சென்னை: அனைத்து பள்ளி, கல்லூரி கட்டடங்களை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். நெல்லை சாப்டர் பள்ளியில் நடந்த விபத்து போன்று இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்து மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.