×

3 எஸ்பிக்கள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 3 எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த ஜியா உல் ஹக் சென்னை சிபிசிஐடி-I எஸ்பியாகவும், சென்னை சைபர் பிரிவு சிபிசிஐடியில் இருந்த ரோகித் நாதன் ராஜகோபால் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜியாக இருந்த செல்வகுமார், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Prabhakar , SP, Change of Work, Home Secretary Prabhakar,
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...