×

மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு 5 தீவிரவாதிகள் நாடு கடத்தல்

இம்பால்: மியான்மரில் இருந்து மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த 5 மணிப்பூர் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். மணிப்பூரில் மக்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் மோனிவாவில் உள்ள சின்ட்வின் ஆற்று பாலம் அருகே பதுங்கி இருந்த இந்த அமைப்பின் 5 முக்கிய தீவிரவாதிகளை மியான்மர் போலீசார் கைது செய்தனர். இவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி இந்தியா வலியுறுத்தியது. இதன்படி, இந்த 5 பேரும் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இந்திய விமான படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில், இம்பாலில் உள்ள திகன்ரஜித் சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த 5 பேரும் அழைத்து வரப்பட்டனர். தற்போது இவர்கள் விசாரணைக்காக மணிப்பூர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Myanmar ,India , Deportation of 5 militants from Myanmar to India
× RELATED அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய...