×

‘‘விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்’’ சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு; சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர்.!

திருவனந்தபுரம்: கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியுள்ள சரிதா நாயர், தன்னை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக பரபரப்பு தகவலை வௌியிட்டுள்ளார். =கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகை சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, அப்போதைய அமைச்சர்கள் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததாக கூறிய புகார் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு கொட்டாரக்கரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு கும்பல் வழிமறித்து காரை அடித்து நொறுக்கியது. பின்னர் அவரையும் தாக்க முயன்றது. இந்த வழக்கு கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சரிதாநாயர் நேற்று நீதிமன்றம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் தற்போது வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல் நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sarita Nair , 'Attempted poisoning' Sarita Nair charged with sedition; Caught in solar panel fraud case.!
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...