மும்பை : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் ஒவ்வொரு வாரமும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் முன்பு ஆஜர் ஆவதில் இருந்து மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சிறப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பும் போது ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.