டெல்லி: முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது பற்றி இனி இடைக்கால மனுதாக்கல் செய்யக்கூடாது என தமிழ்நாடு, கேரளா அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முல்லைப்பெரியாறில் நீரை திறந்துவிடுவது தொடர்பாக புகார்களை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. புகார்கள் குறித்து கண்காணிப்பு குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.