தருமபுரி: தருமபுரி அவ்வை நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் அடித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.