சென்னை: சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் அறை திறக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணியின் நண்பரும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டம் குரங்குசாவடி பகுதியில் உள்ள குழந்தைவேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.