×

சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சை தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது, குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை நிலவுவதற்கும், சமூகப் பிரச்னைகளுக்கும் பெண் விடுதலைதான் காரணம் என்பது போன்ற வாக்கியங்கள் அதில் இடம் பெற்றிருக்கிறது. பெண்ணுக்கு எதிரான இத்தகையக் கருத்துக்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே, இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி, தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

Tags : OBS ,CBSE , OBS urges to take action against those who erred in the CBSE question paper
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...